அம்மா நிலாவை காட்டி அன்று சோறு ஊட்டினாள் அவள் குழந்தைக்கு, இன்றோ அவளே அதே நிலாவை காட்டி சோறு ஊட்டுகிறாள் அவள் பேத்திக்கு.....
அவள் தலையில் இருந்த
நறை மட்டுமே அவளை
வேறுபடுத்தியது
அப்போதிர்க்கும் இப்போதிர்க்கும்...
எனினும் ஒன்று மட்டும் அன்றும் இன்றும் ஒன்றாகவே இருந்தது!! நிலா தன்னிடம் வரும் என்றும், தாம் நிலா-பந்துடன் விளையாட போகிறோம் என்னும் சந்தோஷத்துடனும், சோற்றை மட மட வென்று முழுங்கும் குழந்தைகளின் கனவுகள்..!!!