Wednesday, October 28, 2009

கவி துளி!!!


பறந்த வானம் போன்ற கற்பனைகள் !!
அதில் பொழியும் சொற்களோ நட்சத்திரங்கள் !!
பறந்து சிறகடிப்பதோ சிந்தனை சிதறல்கள் !!
அருவி போன்று பெருக்கெடுப்பதோ வரிகள் !!
உன்னை நினைக்கையிலே பிறக்கின்ற கருத்துக்கள் !!
உணர்பவர்களுக்கு நீ அளிப்பதோ பரிமாணங்கள் !!
அன்பர்களுக்கு நீ கொடுப்பதோ உன்னதங்கள் !!
வெவ்வேறு நிலையிலும் எடுப்பதோ தோற்றங்கள் !!
கவிதையுள் கவிதையை பொழியும் திறன்கள் !!
கவிதைக்கே கவிதையை காட்டும் வலிமைகள் !!
துளியிளிருந்தும் பிறக்கும் பாரம்பரிய எண்ணங்கள் !!
பிரபஞ்சமே உன் வர்ணனையால் வென்றவர்கள் !!!!

Thursday, October 8, 2009

என்ன விளையாட்டு

அனைத்து விளையாட்டிலும் ஆர்வம் காட்டி
போட்டி மனப்பான்மையுடன் திகழும் நான்...
என் உணர்வுகளுடன் விளையாட நினைக்கும்,
என் இனிய சுற்றத்தாரிடம் மட்டும்
மனம் தளர்ந்து போகிறேனே.....
இது
மனத் தளர்ச்சியின் அறிகுறியா??
அல்லது
பாசப் பிணைப்பின் அறிகுறியா??
இவர்களுக்கு
வெற்றியை பரிசாய் அளிப்பதா???
அல்லது
தோழ்வியை பரிசாய் அளிப்பதா???

Friday, October 2, 2009

காலமெல்லாம்


உன்னை சந்தித்த நொடி தான்,
என் வாழ்வின் பொக்கிஷத்தை அடைந்த நொடி...

உன்னிடம் பேசிய நிமிடம் தான்,
என் வாழ்வை விரும்ப ஆரம்பித்த நிமிடம்...

உன்னுடன் பழகிய மணிநேரம் தான்,
என் வாழ்வில் மகிழ்ச்சி அடைந்த மணிநேரம்...

உன்னருகில் இருந்த நாட்கள் தான்,
என் வாழ்வின் கவலைகளை மறந்த நாட்கள்...

உன்னோடு கழித்த மாதங்கள் தான்,
என் வாழ்வே பரவசத்தை தொட்ட மாதங்கள்...

உன் நினைவோடு பயணிக்கும் ஆண்டுகள் தான்,
என் வாழ்க்கையில் முழுமையை அடைந்ததன் அறிகுறிக்கான ஆண்டுகள்!!!