Thursday, February 16, 2017

சித்திரம்


நிறங்களின் சிதறல்களில்
அதன்
வளைவுகளும் கோடுகளும்
அல்லி கொடுப்பது,
நோக்குபவனுக்கு ஒரு கண்ணோட்டம்
ரசிப்பவனுக்கு ஒரு ஓவியம்
உணர்பவனுக்கு ஒரு கோணம்
எனில்
சிதறியவனுக்கு அது அவனுயிரோட்டம்