Sunday, January 10, 2010

நினைவுகள்

தன்னந்தனியாய் கடற்கரையில்
நடந்தேன்,
தனிமையை ரசித்தபடி நான்...
சிறிது நேரம் கழிந்தே
உணர்ந்தேன்,
என் அருகில் நீ இருந்ததை..!!!
ஆம்,
உன் மெல்லிய கையின் தழுவலை
உணர்த்தியது,
இந்த அருமையான தென்றல்...
உன் இனிமையான பேச்சுக்களை
என் காதில் ஓதியது,
இந்த முரசொலி கலந்த அலைகள்...
உன் இருப்பை நிஜமாக்கியது,
நீ பரிசாய் அளித்த
"உன் நினைவுகள்"!!!...