Sunday, March 14, 2010

மறு துருவம்

பெண்ணே நீ
அக்காலம் தொடங்கி
இக்காலம் வரை
அடிமைக் குளத்திலே
வாழ வந்தாயாயடி!!!

உன் மனதை
அறியவும் புரியவும்
புதிதேனும் ஓர்
ஜென்மம்
பிறப்பெடுத்துத் தான்
வரவேண்டுமோடி!!!

உனக்கென ஆசை
இருந்தப் போதும்,
அதை வெளிப்படுத்தக்
கூட யாரேனும்
அங்கீகாரம் தர
வேண்டியதாய்
உள்ளதோடி!!!

எப்பொழுதும் அனைவரின்
உணர்ச்சிகளுக்கு மதிப்பை
ஊட்டும் நீ,
உன் உணர்ச்சிகளுக்கு
மட்டும்
பரிசீலனைக் கூட
இல்லாமல்
போவது ஏனோடி!!!

உனக்குள் இருக்கும்
இரு முகங்களில்
ஒன்றை மட்டும்
வெளி உலகிற்கு
காட்டும் நீ
மற்றொரு முகத்தை
காட்ட மறுப்பது
ஏனடி!!!

உனக்கென வைத்திருக்கும்
அறையிலிருந்து
வெளியே வர
எழுவாயடி,
உலகே உன்
முகத்தைக் காண
சந்தர்ப்பம் தருவாயடி...!!!