Thursday, September 24, 2009

தொலைந்தது எது?!!

நீ என் அருகில் இருந்த வரை........
இன்பத்தை நேசித்தேன்!!
பயத்தை வெறுத்தேன்!!
தனிமையை வென்றேன்!!
பாசத்தில் மூழ்கினேன்!!
சுற்றத்தை மதித்தேன்!!
கவலையின்றி இருந்தேன்!!
என்னையும் காதலித்தேன்!!
ஆனால் இப்போ இவை அனைத்தையும்
நான் தொலைத்தது போல் இருக்கின்றதே.....
தொலைத்தது,
இவற்றையா அல்லது உன்னையா???
நான் உன்னைத் தொலைத்தேனா?!!
நீயாக விரும்பித் தொலைந்தாயா?!!


Wednesday, September 16, 2009

இவளிற்கு ஈடுண்டோ!!!


வயிற்றில் உதைத்தேன், தடவி கொடுத்தாய்...
மார்பில் மிதித்தேன், அன்புடன் அரவணைத்தாய்...
பேச ஆரம்பித்தேன், செல்லமாய் நேசித்தாய்...
தடுக்கி விழுந்தேன், மார்பில் சுமந்தாய்...
பயத்தில் சூழ்ந்தேன், தைரியத்தை தந்தாய்...
வலியில் துடித்தேன், மனமுருகி அழுதாய்...
விஷத்தை ருசித்தேன், தானறியாது பறித்தாய்...
சுற்றத்தை வெறுத்தேன், பாசத்தை பொழிந்தாய்...
தனிமையில் இருந்தேன், பக்கத்தில் அமர்ந்தாய்...
யாவையும் சிந்தித்தேன், அனைத்திலும் உயர்ந்தாய்...
காரணம் யூகித்தேன், அழகாய் சிரித்தாய்...
யாரிற்கும் ஈடற்றவளாய், திகழ்ந்தாய்...
எனக்கு மட்டுமே அரிதாய், கிடைத்தாய்...
என் உயிர்
"தாய்"!!!

Saturday, September 5, 2009

உனது இசைக்கோவை


முத்துக்களின் சிதறல் ஓசையில் இனிமை கண்டேன் !!
மழையின் சாரல் ஓசையில் இனிமை கண்டேன் !!
கடலின் அலை ஓசையில் இனிமை கண்டேன் !!
குழலின் இசை ஓசையில் இனிமை கண்டேன் !!
குயிலின் கூவும் ஓசையில் இனிமை கண்டேன் !!
சலங்கையின் மணி ஓசையில் இனிமை கண்டேன் !!
இவை அனைத்தையும் விட ஓர் மென்மையான இனிமையை கண்டேன் !!
உன் குரல் ஓசையின் இனிமைக்கு முன் உலகின் அனைத்தும் வழுவிழந்ததை கண்டேன் !!!!