Wednesday, September 16, 2009

இவளிற்கு ஈடுண்டோ!!!


வயிற்றில் உதைத்தேன், தடவி கொடுத்தாய்...
மார்பில் மிதித்தேன், அன்புடன் அரவணைத்தாய்...
பேச ஆரம்பித்தேன், செல்லமாய் நேசித்தாய்...
தடுக்கி விழுந்தேன், மார்பில் சுமந்தாய்...
பயத்தில் சூழ்ந்தேன், தைரியத்தை தந்தாய்...
வலியில் துடித்தேன், மனமுருகி அழுதாய்...
விஷத்தை ருசித்தேன், தானறியாது பறித்தாய்...
சுற்றத்தை வெறுத்தேன், பாசத்தை பொழிந்தாய்...
தனிமையில் இருந்தேன், பக்கத்தில் அமர்ந்தாய்...
யாவையும் சிந்தித்தேன், அனைத்திலும் உயர்ந்தாய்...
காரணம் யூகித்தேன், அழகாய் சிரித்தாய்...
யாரிற்கும் ஈடற்றவளாய், திகழ்ந்தாய்...
எனக்கு மட்டுமே அரிதாய், கிடைத்தாய்...
என் உயிர்
"தாய்"!!!

2 comments: