Saturday, August 22, 2009

அழகே உருவானாயடி

கிளியிற்க்கோ அழகு அதன் பச்சையினாலடி!!
மயிலி்ற்க்கோ அழகு அதன் தோகையினாலடி!!
மானி்ற்க்கோ அழகு அதன் கொம்பினாலடி !!
குயிலி்ற்க்கோ அழகு அதன் ஓசையினாலடி !!
உனக்கோ அழகு எதனாலடி ??
உச்சி முதல் உள்ளங்கால் வரை,
நீ அழகாய் தெரிந்தாயடி!!!!


Monday, August 17, 2009

விவாக நாள்

நான் என்னும் பிரபஞ்சத்திலிருந்து
வெளியேறி,
நாம் என்னும் கூண்டிற்குள் புகும்
பொன்னாள்!!!


Friday, August 7, 2009

தித்தித்ததே...

எப்பொழுதுமே என் கண்ணிலிருந்து பெருகிய
கண்ணீர் உவர்ப்பாக இருந்த போதிலும்,
உன் நினைவால் பெருகிய கண்ணீர் மட்டும்
இனிக்கின்றதே!!!
இவ்வாறு அளவற்று இனிப்பை சேர்த்து,
என் வாழ்வை சுவையுற செய்த உமக்கு
என் கோடான கோடி நன்றிகள்...

Monday, August 3, 2009

பிரதிபலிப்பு


ஆகாயத்தில் படர்ந்துக் கிடக்கின்ற கருமையான பாயில்
எண்ணற்று சிதறிக் கிடக்கின்றதே வெள்ளை முத்துக்கள்,
இந்த முத்துக்களுக்கு வெள்ளை நிறம் எவ்விடமிருந்து வந்தது???
நிலாவின் எதிரொளியா!!!!
அல்லது
தேவதைகளுடைய சிரிப்பின் எதிரொளியா!!!!
இல்லை
இப்புவியின் நல் இதயங்களின்
எதிரொளி !!