தாயின் அழகை ரசிப்பதில் தொடங்கி,
இயற்கையின் எழிலை ரசிக்கிறேன்...
குழந்தையின் சிறப்பை ரசிக்கிறேன்...
நட்பின் பிணைப்பை ரசிக்கிறேன்...
காதலின் தனித்துவத்தை ரசிக்கிறேன்...
இறைவனின் படைப்புகளை ரசிக்கிறேன்...
இவை அனைத்தையும் ரசிக்க உதவிய
'கருவிழியே' என் 'கண்மணியே'
உன்னை காண மட்டும்
இன்னோர் கருவி தேவையாய்
உள்ளதே...!!!
