Tuesday, July 28, 2009

எனது வாழ்த்துக்கள்...

வெறும் காகிதமாய் இருந்த என் வாழ்க்கையில்
சித்திரம் வரைந்த ஓவியனானாய் !!
வெறும் பாறையாக இருந்த என் வாழ்க்கையில்
சிற்பம் செதுக்கிய சிற்பியானாய் !!
வெறும் வரிகளாக இருந்த என் வாழ்க்கையில்
இசை கொடுத்த கலைஞனானாய் !!
இவ்வாறு என் வாழ்க்கையை
ஒவ்வொரு நிலையிலும் பரவசம்
அடைய செய்த என் உயிர் தோழர்களே
தங்களுக்கு
எனது அன்பும் நன்றியும் கலந்த
" நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் "


Sunday, July 26, 2009

சரித்திர காதல்

மெல்லிய கருவரையாய் திகழ்ந்தாயே.....
எனவே தான்,
உன் மீது காதல் வசப்பட்டவர்கள்
பல கோடி...
இருப்பினும்,
நீ காதல் வசப்பட்டதோ
சில லட்சம் மீது தான்...
இதனாலேயோ என்னவோ
அவர்களை மட்டும் உன்னுடன்
அழைத்து சென்று விட்டாய்,
ட்சுனாமி என்னும் ஓர்
பெயரை கொண்டு!!!
இதன் பெயரால் நீ
சரித்திரத்தில் இடம் பிடித்தாய்...
ஆனால் காதல் மோகத்தால்,
உன் பல லட்ச காதலர்களின்
பார் புகழெய்தும் கனவுகளை
சிதறல்களாய் சிதறி விட்டாயே.....


Wednesday, July 22, 2009

இயற்க்கையின் வித்து


பெய்யாத மழையின் சாரலில் நநைந்தேன்!
சுடாத வெயிலின் அனலில் எரிந்தேன்!
ஓடாத அருவியின் பெருக்கில் நீந்தினேன்!
மலராத மொட்டின் ஸ்வாசத்தில் மிதந்தேன்!
ஆம் இவ்வனைதிலும் நான் மகிழ்ந்தேன்...
ஆனால் அனைத்தையும் உணர்ந்தேன்,
இவையாவும்,
மாயையின் விளையாட்டென்று
கண்விழித்தப் பிறகே நான்.....

Monday, July 20, 2009

எவ்விடம் வலிமை???

பேசியதோ, கேட்டதோ, கண்டதோ எதுவாக இருப்பினும்...

அன்பு கலந்த புன்னகையுடனும், அரவணைத்த அந்த கைகளின் மேன்மையுடனும்

தன் செல்லப் பெயரை கேட்க்கும் இந்த தருணமே

அனைத்தையும் மறக்க செய்தனவே.......

இத்தனை வலிமை கொண்டதோ பாசம் !!!!!!!!!



Monday, July 13, 2009

உணர்ந்தேனே அனைத்தினிலும்!!!


தழுவிய கரங்களின் மென்மையிலும்,

தந்த முத்தத்தின் சிலிர்ப்பினிலும்,

நோக்கி சிரித்த அன்பினிலும்,

உணர்ந்தேனே நான் முழுமையிலும்,

அந்த இறைவனின் படைப்பை, இந்த குழந்தையினிலும்!!!

ரோஜா இதழ்கள் எங்கே???


இருபத்தைந்து வருடங்கள் கடந்த பாதையில்
ரோஜா இதழ்களும் அதன் முர்க்களுமாய் படர்ந்து கிடந்தனவே!!
ஆனால் இன்றோ
அதே பாதையை நினைவுக் கூர்ந்தால்,
நினைவில் நின்றவை என்னவோ
முற்கள் மட்டுமாகவே காட்சியளிக்கின்றதே
அப்போது
அந்த ரோஜா இதழ்கள் எல்லாம் எங்கே சென்றனவோ???

Thursday, July 9, 2009

மெய் மறந்தது ஏனோ?

மற்றவர்களின் கவிதைகளை

படிக்கும் தருணத்திலும்

கேட்க்கும் நொடியிலும்

மெய் மறந்து வியப்படைந்த நான்,

என்னாலும் கவிதை என சில துளிகளை

தெளிக்க இயலும்

என மறந்து போனது

ஏனோ ?????????????



ஒற்றையின் சாரல்

ஞாயிறு தொடங்கி சனி வரை
உன் நினைவாய் மூழ்கிக் கிடந்த எனக்கு,
அரிதே ஒரு பரிசை கொடுத்தாய்!
அதற்க்கு ஈடு வேறெதுவும் இவ்வுலகில் இல்லையே!!
அதன் இன்பத்தில் முழ்கிய என்னை மெய் மறந்தேனே!
சுற்றத்தையும் நட்ப்பையும் துறந்தேனே!
ஆம்
தனிமை என்னும் அமைதிக் கடலில் மிதந்துக் கொண்டிருக்கிறேன்,
மன நிறைவின் உச்சியில் நான்...
இறைவா எத்தனை வித்தைகள் என்னைக் கொண்டு புரிகிறாய் நீ!!
இன்னும் எத்தனை வித்தைகள் காணப்போகிறாய் நீ !!!!!


இறுதி இதழ்


தன்னிடமிருந்து ஒவ்வொரு இதழும் ஒன்றொன்றாக உதிரும் பொழுது,
தான் சவப்பெட்டியை நெருங்குகிறோம் என்று எண்ணுகிறது அந்த மனசு!
ஆனால் தன்னிடம் இன்னும் எத்தனை இதழ்கள் இருக்கென்று தெரியாது,
உதிர்ந்த இதழே தன்னுடைய இறுதி இதழாக இருக்கக் கூடாதா எனத்
துடிக்கிறது!!!...

என் காதலன்...

சந்திரன் போன்ற முகமும் சிற்றிடையும் கொண்டவள்
என என்னையும் ஒரு பொருட்டாக எண்ணி வர்ணித்தவன்
எவனோ!!!
கவிஞனா?!..
ஓவியனா?!..
சிற்பியா?!..
ஆம் இவ்வனைத்தையும் ஒருங்கே கொண்ட அந்த கலைஞன்
என் உயிர் காதலன்
எனது
" மனசாட்சி "